ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்
69 மேலதிக வாக்குகளால்
அவசரகால சட்டம் நிறைவேற்றம்
(கே. அசோக்குமார், எம். எஸ். பாஹிம்)
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக
வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்கு களும் கிடைத்தன.
பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி
விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு.
லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.
நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக
வாக்களித்தனர்.
இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும், ஐ. தே. கவினரும் எதிர் த்தே வாக்களித்தனர்.
அவசரகாலச் சட்டத்துக்கு ஆதர வாக தொடர்ந்தும் ஆதரவளி த்து வாக்களித்து வந்த ஜே. வி.
பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களி த்தனர். சபைக்குள் மனோ கணே சனுடன் ஐ. தே.
க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். (ள)